கடவுள் சொன்னது…

where-is-God-png-e1506969346521

முகம் தெரியாத
ஒருவரின்
தோல்விக்கு கூட 
நான் அழுகிறேன்.
என் தோல்விக்கு
கடவுள் கலங்குவான்
என்ற நம்பிக்கையில்…

முகம் தெரியாத
ஒருவரின்
பசிக்கு கூட
நான் சோர்கிறேன்.
என் பசிக்கு
கடவுள் சோரிடுவான்
என்ற நம்பிக்கையில்…
இப்படி…
அடுக்கடுக்காய்
அடுத்தவர்களின்
துயரங்களை
என்னுடையதாக்கிய பிறகு…
ஒரு நாள் கடவுளை
சந்திக்க நேர்ந்தது .
கடவுளிடம் கேட்டேன்…
உங்களை எளிதில்
சந்திக்க வழியில்லையா?

ஓ..வென்று அழுதவர்
சொன்னார்…

அடுக்கடுக்காய் …
துயரங்களை பார்த்து
வலிகளில் மூழ்கி
கண்ணீரில் மிதந்து
ரத்தங்களில் உறைந்து
உறவுகள் வீசிய
அமிலத்தில் சிதைந்து
பக்குவபட்ட மனங்களிடம்
மண்டியிட்டு கிடக்கிறேன்.

தயவு செய்து
என்னை பார்த்ததாக
யாரிடமும் சொல்லாதே…
என்றான்.


– யாரோ

Leave a comment