1. உன்னை மறந்திருப்பேன் என நீ
நினைத்திருப்பாய்,
உன்னை மறக்க முடியாத வலிகளால்
பினைக்கப்பட்ட வாத்தையல்லவா
நான்….
°°°°°°°°°°°°°°°°°°
2. சந்தோசமாய் வாழ்கிறேன் என
எண்ணியிருப்பாய்,
எப்படி முடியும்
நான் வாழும் வாழ்க்கையின்
முழு வலிகளும்
நீ தந்த வரமல்லவா….
°°°°°°°°°°°°°°°°
3. முப்பது நாட்களில் உன்னை மறந்திருப்பேன்
என்றிருப்பாய்,
என்பது வருடங்கள் ஆனாலும்
உன்னைப் போல வருமா ஒரு உறவு?
°°°°°°°°°°°°°°°°
4. பேசாமல் விட்டிருப்தால்
உன் நினைவுகளை
தொலைத்திருப்பேன் என்றிருப்பாய்,
இன்னும் அதிகமாய் நான் சேமிக்கத்
தேடுவது உன் நினைவுகளை என்று தெரியாமல்
°°°°°°°°°°°°°°°°°°
5. பார்த்தும் பார்க்காமல் முகத்தை திருப்பிப் போனதால்
என்னென்ன நினைத்தாயோ….?
நான் நோக்கிடும் திசைகளில்
பார்க்க ஏங்கிடும்
ஒற்றை உயிர் நீ மட்டுமடி….
°°°°°°°°°°°°°°°°
6. எதை நினைத்து
நீ இன்னும் என்னைப் பாக்காமல்
இருக்றாயோ…?
நடை பாதையில்
என் கண்கள் உனைப் பார்க்க தவம் கிடக்கிறதே…….
°°°°°°°°°°°°°°°
7. உன்னோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,
கற்பனைகள் மட்டுமே
நிறந்தரம் என தெரிந்த பின்பு
அங்கு ஒரு அழகான மாளிகை கட்டி
உன்னோடுதான் வாழ்ந்து கொன்டிருக்கிறேன்…..
°°°°°°°°°°°°°°°°°°°°
8. மௌனம் கொள்கிறாய்
உன் மௌனமே என் மரணம்
என் மரணம் வரை
உன் ஞாபகங்களே என் வாழ்வு..
என்று புரியாமல்…
°°°°°°°°°°°°°°°°
9. உயிரோடே பிரிந்தேன்
உயிர் போகும் வரை உனக்காக
இருக்கின்றேன்
உன்னை மட்டுமே எனக்காக கேட்கின்றேன்…..
======================================================================
மு. பா. அஸ்க்கியா